Cinema

நடிகை இலியானாவின் கால் முறிந்துவிட்டதாம்!

பிரபல தெலுங்கு நடிகை இலியானா. இவர் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தியில் ஹிட்டான 3 இடியட்ஸ் சின் தமிழ் ரீமேக் ஆகும்.
ஸ்ரீகாந்த்,  ஜீவா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இலியானா பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்றுக்காக அவருக்கு நடன பயிற்சி அளிக்கப்பட்டது.
டான்ஸ் மாஸ்டர் பராஹான் இப் பயிற்சியை அளித்தார். அப்போது இலியானா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.  இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. வலியால் துடித்தார். டாக்டர்களை வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது.
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாகவும் எனவே சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் ஐதராபாத் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

சர்வசாதாரணமாய் விமானம் ஓட்டும் அஜித் (நிஜக் காணொளி)

நடிகர் அஜித் குமார் சிறந்ததொரு மோட்டார் ஓட்டப்பந்தய வீரர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
அவருக்கு வாகனங்களின் மேலும் அதை ஓட்டுவதிலும் எப்போதுமே ஒரு அலாதி பிரியம் இருக்கும்.
வில்லன் திரைப்படத்தில் கூட ஜப்பானில் இருந்து பிரத்தியோகமான ஒரு மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்திருந்தார்.
இங்கே பாருங்கள் Boomerang விளையாட்டில் எப்படி சர்வசாதாரணமாக செயற்படுகிறார் என்று.


வடிவேலுவுக்குமறுவாழ்வு கொடுக்கத் தயாராகும் பிரபுதேவா....

பிரபு தேவாவும் வடிவேலுவும் இணைந்த நகைச்சுவைகளுக்கு எப்போதும் தனி மதிப்புண்டு.
காதலன், லவ்பேட்ஸ் தொடக்கம் எங்கள் அண்ணா என இவர்களது நகைச்சுவைக் கூட்டணிக்கு பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போலாம்.
ஆனால் பிரபுதேவா இயக்கி வரும் வெடி படத்தில் விஷாலுடன் காமெடி வேடத்தில் விவேக் நடித்து வருகிறார்.
இதுகுறித்து பிரபுதேவாவிடம், உங்களது பல படங்களில் வடிவேலு நடித்துள்ளார். அவ்வாறு இணைந்து நடித்த பல படங்களில் காமெடி பேசப்பட்டது.
வெடியில் வடிவேலு இடம் பெறாமல் போனது ஏன் என்றதும்,
வடிவேலு என் உயிர் நண்பன். வெடியில் நான் இயக்குநர் மட்டுமே. நடிக்கவில்லை. விரைவில் நான் நடிக்கும் புதிய படத்தில் என் நண்பன் வடிவேலுவும் இடம் பெறுவார். வெடி படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விட்டது.

இயக்குனருக்கு துரோகம் செய்த நடிகை கம்னா

ஜெயம் ரவி நடித்த ‘இதயத் திருடன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் காம்னா ஜெத்மலானி..
இவர் தற்போது புதுமுக நடிகர் சரணுடன் ‘காசேதான் கடவுளடா’ என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். ‘அகம் புறம்’, ‘தீ நகர்’ ஆகிய படங்களை இயக்கிய திருமலைதான் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
நாளை இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் காம்னா எனை ஏமாற்றி விட்டார் என்று இயக்குனர் திருமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது;
தெலுங்கில் வெளியான ‘பிளேடு பாபுஜி’ படத்தின் ரீமேக்தான் இந்த படம். இப்படம் முழுநீள காமெடிப் படமாகும்..
இப்படத்தில் சரண், கருணாஸ், சத்யன், பாண்டியராஜன், மயில்சாமி, காம்னா என 63 நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
அதிகபட்ச ஆர்ட்டிஸ்ட்கள் என்பதால் ஷூட்டிங்குக்காக அவர்கள் கால்ஷீட்டை முறைப்படுத்தி பெற 6 மாதம், டப்பிங்குக்கு 3 மாதம் என மொத்தம் 9 மாதம் தேவைப்பட்டது.
ஷூட்டிங்குக்கு வரவழைக்க முடிந்த நட்சத்திரங்களை, படத்தின் புரமோஷனுக்கு அழைத்து வர முடியவில்லை.
பாடல் வெளியீட்டு விழாவுக்கு கதாநாயகி காம்னாவை அழைத்தபோது மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து போக டிக்கெட் கேட்டார். டிக்கெட் வாங்கிக் கொடுத்திருந்தும் வராமல் ஏமாற்றிவிட்டார்.’’ என்றார்.

ஒரு வாரத்தில் 100 கோடி சம்பாதித்த விஜயின் காவலன்

தொய்வடைந்திருந்த விஜயின் சினிமா வாழ்க்கையில் அதிரடி திருப்பமாக மாற்றிய படம் தான் காவலன்.
விஜய் மற்றும் அசின்ஆகியோர் நடித்திருந்தனர்.
மலையாள இயக்குனரான சித்திக் இப்படத்தை தமிழில் இயக்கியிருந்தார். இப்படம் முதலில் பாடிகார்ட் என்ற பெயரில் மலையாளத்தில் எடுக்கப்பட்டது.
அங்கே இப்படம் வெற்றி பெறவே, அதை தமிழில் ரீமேக் செய்தார் சித்திக்.
தமிழில் காவலனாக உருமாறிய இப்படத்தை பார்த்த ஹிந்தி நடிகர் சல்மான் கான், பாலிவுட்டில் ரீமேக் செய்ய விரும்பினார்.
ஹிந்தியிலும் சித்திக் இயக்க விஜய் நடித்த வேடத்தில் சல்மான் கானும், அசின் நடித்த வேடத்தில் கரீனா கபூரும் நடித்திருந்தனர். தமிழில் காவலான இருந்த இப்படம் ஹிந்தியில் ‘பாடிகார்ட்’ ஆனது.
கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியான இத்திரைப்படம் ஒரு வாரத்திற்குள் நூறு கோடி ரூபாயை வசூல் பண்ணியுள்ளது. வட அமெரிக்காவில் ஆறரை கோடி வசூல் செய்திருக்கிறது.

36 பிரிவில் 14 விருதை தட்டிப் பறித்த தமிழ் சினிமா

நாளை இந்திய சினிமா உலகமே உற்சாகத்துடன் உற்று நோக்கும் ஒரு நாளாகும்.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு, சினிமா உலகிற்கென தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. 2010 ஆண்டிற்கான தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழா, நாளை தில்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது.
58-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதில் தமிழ் திரைப்படத்துறைக்கு மட்டும் 14 தேசிய விருதுகள்
கிடைத்திருக்கின்றன.
முழு நீள திரைப்பட வகையில் மட்டும் மொத்தம் 36 பிரிவுகளில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 14 விருதுகளை தமிழ் சினிமா உலகம் வென்று காட்டி சாதனை படைத்துள்ளது.
நாளை நடைபெற உள்ள இவ்விழாவில் இந்திய குடியரசுத்தலைவரின் கையால், திரை நட்சத்திரங்கள் விருதுகளைப் பெறுவார்கள். இதற்காக விருது வென்ற திரை நட்சத்திரங்கள் இன்று இரவு தில்லி செல்கின்றனர்.
இனி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விருதுகளின் பட்டியல்
சிறந்த நடிகர் – தனுஷ் (ஆடுகளம்)
சிறந்த நடிகை – சரண்யா (தென் மேற்கு பருவக்காற்று)
சிறந்த இயக்குனர் – வெற்றி மாறன் (ஆடுகளம்)
சிறந்த திரைக்கதை – வெற்றி மாறன் (ஆடுகளம்)
சிறந்த துணை நடிகர் – தம்பி ராமையா (மைனா)
சிறந்த துணை நடிகை – சுகுமாரி (நம்ம கிராமம்)
சிறந்த படத்தொகுப்பு – T.E. கிஷோர் (ஆடுகளம்)
சிறந்த கலை இயக்கம் – சாபு சிரில் (எந்திரன்)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – இன்ட்ரன்ஸ் ஜெயன் (நம்ம கிராமம்)
சிறந்த பாடலாசிரியர் – வைரமுத்து (தென் மேற்கு பருவக்காற்று)
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் அமைப்பாளர் – வி ஸ்ரீனிவாஸ் எம் மோகன் (எந்திரன்)
சிறந்த நடன இயக்குனர் – தினேஷ் குமார் (ஆடுகளம்)
சிறந்த மாநில மொழி திரைப்படம் (தமிழ்) – தென்மேற்கு பருவக்காற்று
சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது – வி.ஐ.எஸ். ஜெயபாலன் (ஆடுகளம்)
தேசிய விருதுகளை வென்ற அத்தனை கலை உலக திறமைசாலிகளுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மரண விளிம்பில் இருந்து மீண்டு வந்த ரஜனி

சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினியை கவிஞர் வைரமுத்து சமீபத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.
ரஜினியின் உறவினர் தவிர்த்து, வெளிநபர்களில் ரஜினியை நேரில் சந்தித்துப் பேசிய இரண்டாமவர் வைரமுத்து. இவருக்கு முன் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளார்.
ரஜினியுடனான தனது சந்திப்பு குறித்து வைரமுத்து குமுதம் பத்திரிகைக்கு எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில் சில பகுதிகள்:
120 நாட்களுக்குப் பிறகு ரஜினியைச் சந்திக்கப் போகிறேன். பரவசம் போலொரு துயரம்; துயரம் போலொரு பரவசம் நெஞ்சில் பரவி நிற்கிறது.
வாழ்வின் விளிம்புவரை சென்று மீண்ட புகழ்மிக்கதொரு பெருங்கலைஞனை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவிருக்கிறேன்.
எத்தனை வதந்திகள்! எத்தனை தொலைபேசி அழைப்புகள்!
‘வீரன் ஒரு முறை சாகிறான்; கோழை பலமுறை சாகிறான்’ என்ற பழமொழி உண்டு. அதில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய மூன்றாம் வரி ஒன்றுண்டு: ‘புகழ்மிக்கவன் அடிக்கடி கொல்லப்படுகிறான்.’
பொய்களில் பிறந்த கற்பனைகளையெல்லாம் பொடிப் பொடியாக்கிவிட்டு நிஜத்தைப் போல நிமிர்ந்து வெளிவந்துவிட்டார் ரஜினி.
மருத்துவத்தின் அறிவும் மனிதர்களின் அன்பும் அவரை இன்று மீட்டெடுத்துக் கொண்டு வந்து காட்டிவிட்டன கண்களில்.
நோயின் பிடியிலிருந்து விடுபட்டு விட்டாலும் அது பிடித்த பிடியின் தடம் ஆங்காங்கே பதிந்திருக்கிறது உடம்பில். ஆனால், மேகம் விலகிய இடுக்கில் சூரியன் சுடர்வி டுவது மாதிரி ஜொலிக்கின்றன அவர் கண்கள்.
அவர் புன்னகையை மறைக்காத இளந்தாடி முளைத்திருக்கிறது முகத்தில். பிள்ளை பெற்ற பெண்ணை அடிவயிற்றுச் சுருக்கங்கள் அடையாளம் காட்டுவதுபோல் சின் னதாய்ச் சாட்சி சொல்கிறது வடிந்தும் வடியாத வீக்கம்.
வெள்ளைப் பட்டையிட்ட கறுப்பு நீளக்கால்சட்டையும் வெள்ளை முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தார்.
பழைய ரஜினியில் தொண்ணூறு விழுக்காடு பார்த்தேன். ஆனால் சொல்லில் அதே அழுத்தம். அசைவுகளில் அதே வேகம். உரையாடலில் அதே உற்சாகம். சிரிப்பில் அதே தெறிப்பு.
‘‘ராணா படத்தின் கதை விவாதத்தில் இந்த வாரம் கலந்து கொண்டீர்களாமே? ரவிகுமார் சொன்னார்.’’
‘‘ஆமா: சில மாறுதல்களோடு படப்பிடிப்பைத் தொடங்கவேண்டியிருக்கிறது.’’
‘‘சில மாதங்கள் கழிந்தாலும் பரவாயில்லை. முழு பலம் பெற்று உங்கள் உடலே உங்களுக்குக் கட்டளையிடும்போது களத்துக்கு வாருங்கள். நீங்கள் தொடாத உயரமில்லை; அடையாத வெற்றியில்லை; சேர்க்காத செல்வமில்லை. இனி உடல்நலம்தான் முக்கியம்.’’
வாய்விட்டுச் சிரித்தார் ரஜினி. பழைய சிரிப்பு; பளிச்சென்ற சிரிப்பு; தங்கச் சில்லறை அள்ளிப் பளிங்குத் தரையில் எறிவது மாதிரி கலகலவென்ற சிரிப்பு.
‘‘அது எப்படி பாலசந்தர் சாரும் சோ சாரும் நீங்களும் கூடிப் பேசியதைப் போல் ஒரே கருத்தைச் சொல்கிறீர்கள்?’’
‘‘அன்புக்கு வாய்கள்தான் வேறு வேறு; வார்த்தைகள் ஒன்று.’’
‘‘ஒவ்வொரு தீமையிலும் ஒரு நன்மை நேரும்; இந்த நோயினால் நீங்கள் அடைந்த நன்மையென்ன?’’
‘‘மனைவி மக்களின் அன்பை அனுபவித்தேன். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் பேரன்பின் பெருக்கத்தை அறிந்துகொண்டேன். இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்வை மறுபரிசீலனை செய்கிறேன்.’’
மது – புகை இரண்டிலிருந்தும் அவர் முற்றிலுமாக விடுபட்டுவிட்டார். ரசிகக் கண்மணிகளே! மதுவையும் புகையையும் தொடாதவர்கள் தொடாதீர்கள்; தொட்டவர்கள் விட் டுவிடுங்கள்.
அரசியல் நோக்கித் திரும்பியது பேச்சு.
இந்நாள் முதலமைச்சர், அவரிடம் பாசத்தோடு பேசிய பரிவைப் பகிர்ந்துகொண்டார். அந்த உரையாடல் பத்திரிகையில் மறுநாள் பதிவான பிறகு முன்னாள் முதலமைச்சரோடு ரஜினி பேசியிருக்கிறார்.
பத்திரிகையில் வந்த உரையாடலைக் கண்டுகொள்ளாமல் கண்ணியம் காத்து அன்பு காட்டிய கலைஞரின் நாகரிகத்தைப் புகழ்ந்து சொன்னார்.
90 நிமிடங்களுக்கு மேல் பேசியிருப்போம். விடைகொண்ட போது படியிறங்கி என்னோடு பயணித்து கார்க் கதவு வரை வந்து கைகூப்பினார்.
மீண்டும் அவர் முகம் பார்த்தேன்.
‘‘இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது’’
- என்ற வரிகள் என் நெஞ்சில் வந்து போயின. நிமிர்ந்து நின்ற ரஜினியிடம் பழைய கம்பீரம் பார்த்தேன்.
‘‘விதியை நினைப்பவன் ஏமாளி – அதை
வென்று முடிப்பவன் அறிவாளி’’
ரஜினி அறிவாளி!”
-இவ்வாறு அந்தக் கட்டுரையில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

காஞ்சனா பட வெற்றியால் மகிழ்ச்சியில் திழைக்கும் லட்சுமிராய்

காஞ்சனா பட வெற்றியால் மகிழ்ச்சியில் திகழ்ந்து கொண்டிருந்த லட்சுமிராய், அடுத்த படமும் ஹிட் ஆகி விட்டதால் சென்னையிலேயே செட்டிலாகி விட்டாராம்.
சென்டிமென்ட்டாக அவர் காஞ்சனா படக்கதையை கேட்ட அதே ஹோட்டலில் புதுப்பட கதைகளை கேட்டு வருகிறாராம்.
நடிக்க வந்த இத்தனை காலம் கழித்து இப்போதுதான் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவித்து வருகிறார் லட்சுமிராய்.
இந்த சந்தர்பத்தை விட்டுவிடக் கூடாது என்று நினைத்தவர், பாலிவுட், டோலிவுட் என அலைவதை நிறுத்திவிட்டு சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.
சாலிகிராமத்தில் தனியாக வாடகை வீடு எடுத்து தங்கியிருக்கும் அவர் மீது இளம் இயக்குனர்களின் பார்வை விழத் தொடங்கி விட்டது. நாள்தோறும் ஒரு கதை கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
ஆனால் இவர் கதை கேட்பது, இந்த வாடகை வீட்டில் அல்ல. காஞ்சனா படத்தை பிரபல ஓட்டல் ஒன்றில் உட்கார்ந்து கேட்டாராம்.
அந்த சென்ட்டிமென்ட் தொடரட்டும் என்பதற்காக கதை சொல்ல வருகிற இயக்குனர்களையும் அதே ஓட்டலுக்கு வரவழைக்கிறாராம்.

ஜெய் அஞ்சலி இடையே காதலா?

நடிகர் ஜெய்யுடன் காதல் ஏதும் இல்லை என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் நிறுவனமாக ஃபாக்ஸ் ஸ்டுடியோவுடன் சேர்ந்து முதன்முறையாக தயாரிப்பாளராக ஏ.ஆர்.முருகதாஸ் அவதரித்திருக்கும் படம் தான் “எங்கேயும் எப்போதும்”.
தன்னுடைய உதவியாளர் சரவணன் இயக்கிய இப்படம், வருகிற 16ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுசம்பந்தமான கடைசிகட்ட பிரஸ்மீட் கூட்டம் நடந்தது.
இதில் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ், டைரக்டர் சரவணன், நடிகர்கள் ஜெய், சர்வானந்த், நடிகை அஞ்சலி, இசையமைப்பாளர் சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, “எங்கேயும் எப்‌போதும்” படத்தின் பாடல் காட்சிகளில், ஜெய்யுடன், நடிகை அஞ்சலி மிகநெருக்கமாக நடித்திருப்பது கண்டு பத்திரிக்கையாளர்கள், ஜெய்யுடன் காதலா…? இவ்வளவு ஈடுபாடோடு நடித்துள்ளீர்களே என கேட்டனர்.
அதற்கு அஞ்சலி, இந்த கேள்வியை கேட்டது யாரு? உங்க காலில் வேண்டுமானாலும் விழுகிறேன். அப்படி காதல் ஏதும் இல்லை என்றார்.
விடாது நிருபர்கள் ஜெய்யிடமும், அஞ்சலி மீது காதல் பற்றிய உங்கள் பதில் என்ன? என்று கேட்க, ஜெய்யோ, உண்டு, இல்லை என்று தெளிவாக பதில் சொல்லாமல் குழப்பினார்.
உடன் அஞ்சலியிடம் சில நிருபர்கள் நீங்களோ, கேள்வி கேட்டது யார்? காலில் வேண்டுமானாலும் விழுகிறேன் என்கிறீர்கள், ஆனால் ஜெய்யோ, காதலில் விழுந்தவர் மாதிரியே… எனக் கேட்கும் போது, குறுக்கிட்ட அஞ்சலி, அப்படியெல்லாம் ஏதும் இல்லை, இதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து காதல் பற்றிய கேள்வியை கேட்கவும், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த, பி.ஆர்.ஓ., குறுக்கிட்டு, காதல் பற்றிய கேள்விகளை மட்டுமே கேட்கிறீர்களே, படத்தை பற்றி கேளுங்கள் என்று சொல்லும் அளவிற்கு தொடர்ந்தது ஜெய்-அஞ்சலி பற்றிய காதல் கேள்வி.
இருந்தாலும் இறுதிவரை இருவருமே காதலை ஒப்புக்கொள்ளவும் இல்லை, ஆணித்தரமாக மறுக்கவும் இல்லை…!

திருமண செய்தியால் அம்மாவுக்கும் மகளுக்கும் இடையில் மோதல்

அம்மா -மகள் என்று இல்லாமல் தோழிகளை போல் ஒன்றாக சுற்றி வந்தவர்கள் த்ரிஷாவும், அவரது அம்மா உமா கிருஷ்ணனும்.
பார்டியாகட்டும், பொது நிகழ்ச்சிகள் ஆகட்டும் இருவரும் ஒன்றாகத்தான் தெரிவார்கள்.
இப்படி இணக்கமாக இருந்த இருவருக்கும், இப்போதும் கடும் மோதல் ஏற்பட்டிருக்கிறதாம். இந்தமோதலுக்கு காரணம் த்ரிஷா பற்றிய திருமணம் செய்திதானாம்.
இருதினங்களுக்கு முன்னர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அல்லது சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை த்ரிஷா திருமணம் செய்ய இருப்பதாகவும், செப்டம்பரில் இவர்களது நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும் த்ரிஷாவின் தாயார் உமா ‌கூறியிருந்தார்.
ஆனால் இந்த செய்தி வெளியான அன்றிரவே தனது டிவிட்டர் வலைதளத்தில் இதனை மறுத்துள்ளார் த்ரிஷா.
இதற்கு காரணம் மாப்பிள்ளை யார் என்பதில், த்ரிஷாவுக்கும், உமாவுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் தான்.
காதல் திருமணம்தான் செய்வேன் என்று அடிக்கடி கூறிவரும் த்ரிஷா, இப்போது தனது மனதுக்கு பிடித்தமான ஒருவரை தேர்வு செய்து வைத்துள்ளாராம்.
ஆனால் உமாவோ, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறாராம். அதனால் தான் த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், அவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் என்றும் உமா பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்திருக்கிறார்.
இதில் கடுப்பான த்ரிஷா, மீண்டும் தன் திருமண செய்திக்கு ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
த்ரிஷா திருமணத்தால் அம்மா-மகளுக்கு இடையே புகைச்சல் ஏற்பட்டு இருக்கிறது.

மணப்பெண் ஆக ஆசைப்படும் வித்யாபாலன்...

தொழிலதிபர் சித்தார்த்தை எனக்கு பிடித்திருக்கிறது. அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார்.
யுடிவி நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் ராய் கபூரும், நடிகை வித்யாபாலனும் காதலிப்பதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இருவரும் கோவாவில் ஒன்றாக சுற்றியதை பார்த்த பலர், அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது என்று கூட கிளப்பி விட்டார்கள்.
ரகசிய திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, தேனிலவுக்காகத்தான் கோவாவுக்கு ஜோடியாக வந்துள்ளனர் என்றுகூட செய்திகள் வெளியாயின.
அந்த செய்திகளையெல்லாம் நடிகை வித்யாபாலன் மறுத்திருக்கிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு சித்தார்த்தை பிடித்திருக்கிறது.
நான் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். மணப்பெண் ஆக ஆசையாக இருக்கிறது. ஆனால் எங்களுக்கு ரகசியமாக திருமணம் ஆகவில்லை, என்று கூறியுள்ளார்.

என் திருமண வாழ்க்கையில் விளையாடாதீர்கள் – ரீமா சென் கோபம்

பிரபல நடிகையான ரீமா சென்னிற்கு அடுத்த ஆண்டு திருமணம் என்றும், அவரது ஆண் நண்பரான ஷிவ் கரண் சிங்கை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் கோலிவுட்டில் செய்திகள் உலா வந்தன.
தற்போது கிடைத்துள்ள தகவலின் படி அந்த செய்திகளால் நடிகை ரீமா சென் கோபத்தின் உச்சத்திலிருக்கிறாராம்.
இதுகுறித்து அவரது செருங்கிய வட்டாரத்திடம் கொந்தளித்துள்ளதாவது; “என் கல்யாணத்தை மீடியாதான் நடத்தி வைக்கணுமா? எங்கிட்ட பேசாமலேயே, நான் சொன்னதா செய்தி போடுறாங்க…
என் திருமண வாழ்க்கையில விளையாடறதுக்கு இவங்க யாரு? இப்போதைக்கு கல்யாணம் இல்லை, நடக்கும்போது நானே எல்லாரையும் கூப்பிட்டு சொல்றேன்” என்றாராம்..

வெங்கட் பிரபுவிற்கு அடுத்து வெற்றிமாறனுடன் கூட்டணி

கிளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்து, அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் 50-வது படமான ‘மங்காத்தாவை’ தயாரித்தது. இப்படமும் எதிர்பார்த்தது போலவே நல்ல வசூலை அள்ளிக் குவித்தது.
இதே கூட்டணியில் மற்றொரு படம் செய்ய இருக்கிறோம் என்று தயாநிதி அழகிரி தரப்பு தகவல் வெளியிட்டிருந்தது.
ஆனால் இன்று கிடைத்த தகவலின்படி, கிளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் ‘ஆடுகளம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற, இயக்குனர் வெற்றி மாறனுடன் இணைந்திருக்கிறது.
வெற்றி மாறன் இரண்டு விதமான ஸ்கிரிப்டினை கை வசம் வைத்துள்ளார். ஒரு வடசென்னை பற்றிய படம், மற்றொன்று வரலாற்று காலப்படம்.
இந்த இரண்டில் ஏதேனும் ஒரு கதையை கிளவுட் நைன் மூவிஸ் தயாரிக்கும் எனத் தெரிகிறது...

நடிகர் ஆர்யாவின் அடுத்த படம் !

தமிழ் சினிமா உலகம் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என அனைத்து திரை உலகமும், பிற மொழிகளில் சூப்பர் ஹிட்டான படங்களை தங்கள் மொழியில் ரீமேக் செய்து விடுகின்றன.
அதன் தற்போதைய உதாரணம் சிம்புவின் ‘ஒஸ்தி’ திரைப்படம். இது ஹிந்தியில் வெற்றி பெற்ற ‘தபாங்’ படத்தின் ரீமேக் ஆகும்.
அந்த வரிசையில் தற்போது தமிழ் ரீமேக் ஆக இருக்கும் படம் ‘ராஜநீதி’. ஹிந்தியில் வெற்றி பெற்ற இப்படத்தில் அஜய் தேவ்கன், நானா படேகர், ரன்பீர் கபூர், கேத்ரினா கைப் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
இப்படம்தான் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது. இதில் ரன்பீர் கபூர் நடித்த வேடத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார். பிற நடிகர்கள் தேர்வு விரைவில் நடைபெற இருக்கிறதாம்.

சிக்கல்கள் நீடித்து வரும் ‘கிருஷ்ணலீலை’

ஜீவன், மேக்னாராஜ் நடித்து இருக்கும் படம் ‘கிருஷ்ணலீலை’. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் முடிந்தாலும் படம் வெளிவருவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகிறது.
படத்தின் தயாரிப்பாளரான புஷ்பா கந்தசாமியிடம் படத்தின் இயக்குனர் செல்வன் கேட்டபோது  தனக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் படத்தினை ஐங்கரன் நிறுவனத்தினடம் முழுவதும் கொடுத்து விட்டதாகவும் கூறினார்.
இதனால் இயக்குனர் செல்வன் படத்தை வெளியிடும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க போவதாக அறிவித்தார்.
தயாரிப்பாளர்கள் தாங்கள் ஐங்கரன் நிறுவனத்திடம் பேசி முடிவு எடுப்பதாகவும் செப். 15ம் தேதி வரை பொறுத்து இருக்குமாறும் கூறவேஇ தனது போராட்டத்தை கைவிட்டு இருக்கிறார்.
இந்நிலையில் இயக்குனர் செல்வன் பேசிய போது ‘ கிருஷ்ணலீலை எனது கனவுப்படம். படப்பிடிப்பு முடிந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் வெளியிட காலம் தாழ்த்தி கொண்டே வருகிறார்கள். 2008ம் ஆண்டு வந்திருக்க வேண்டிய படம் அது.
இப்பொழுது அரசு கொண்டு வந்து இருக்கும் சமச்சீர் கல்வியை நான் 2008ம் ஆண்டே கிருஷ்ணலீலை படத்தில் கூறி இருக்கிறேன்.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சமச்சீர் கல்வி என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும் என்று தீர்வு கூறி இருக்கிறேன்.
தற்போது நடந்து வரும் அரசியல் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை பார்க்கும் போது இந்த சமயத்தில் எனது படம் வெளிவந்தால் நன்றாக இருக்கும்.
ஆனால் ஐங்கரன் நிறுவனம் ‘கிருஷ்ணலீலை’ படத்திற்கு முன்பாக ‘களவாடிய பொழுதுகள்’ படத்தினை வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வலம் வருகின்றன.
அவ்வாறு வெளியி

ஏழாம் அறிவு பாடல் வெளியீட்டு விழா இம்மாதம் 22-ம் தேதி

சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ஏழாம் அறிவு படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 22-ம் தேதி நடக்கிறது என்று படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ், சூர்யா கூட்டணி சேர்ந்தாலே வெற்றி தான். தற்போது இந்த கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் தான் ஏழாம் அறிவு. படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் கமல் மகள் ஸ்ருதி ஹாசன்.
படத்தை தயாரித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 22-ம் தேதி மாலை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது. பாடல்களுக்கு புதுவிதமாக இசையமைத்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.
ஏற்கனவே சூர்யா, முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த கஜினி திரையுலகை ஒரு கலக்கு கலக்கியது. இந்தியிலும் ஆமிர் கான் நடிப்பில் சக்கை போடு போட்டது.
தற்போது இந்த வெற்றிக் கூட்டணியின் ஏழாம் அறிவு படமும் சூப்பர் ஹிட்டாகுமா என்பதை தெரிந்து கொள்ள தீபாவளி வரை பொருத்திருக்க வேண்டும்.
ஏனென்றால் ஏழாம் அறிவு வரும் அக்டோபர் மாதம் 26-ம் தேதி அதாங்க தீபாவளி அன்று வெளியாகிறது.
ட திட்டமிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடருவேன். செப். 15ம் தேதி வரைக்கும் தான் பொறுமையாக இருப்பேன். அதன் பின்பு கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன்.
படம் எடுத்து முடித்த போதே வெளியிட்டு இருந்தால் இந்த நேரம் ஒரு புரட்சிகரமான இயக்குனராக ஆகி இருப்பேன். எனது வாழ்க்கையே  மாறி இருக்கும்  ‘ என்று தெரிவித்தார்..

மூன்று மணி நேரம் நீடித்த விஜய் மற்றும் சீமான் சந்திப்பு

‘வேலாயுதம்’ படத்திற்குப் பிறகு சீமான் இயக்கும் ‘பகலவன்’ படத்தில் விஜய் நடிப்பார் என பேசப்பட்டது.
ஆனால் திடீரென்று கௌதம் வாசுதேவ் மேனன்  தான் இயக்கும் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ படத்தில் நடிப்பார் என்றார்.
அதற்கென போட்டோ ஷூட்டும் நடத்தப்பட்டு  பத்திரிகைகளில் விளம்பரங்களும் வெளியாயின.
இதனால் சீமான் இயக்கும் படம் அப்படியே நின்று போனதாக கருதப்பட்டது. சீமான் நாம் தமிழர் இயக்கத்தில் முனைப்போடு இருப்பதால் இப்போதைக்கு படமு

நெஞ்சில் நின்ற நடிகர் முரளியின் முதலாமாண்டு நினைவலைகள்

தமிழ் சினிமாவின் கதாநாயகர்களில் நடிகர் முரளிக்கென்று தனி இடம் இருக்கிறது. கடந்த ஆண்டு இதே தேதியில் காலை 7.30 மணி அளவில் மாரடைப்பால் காலமானார்.
இவரது இழப்பு திரையுலகினருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியானதாகும். இன்று அவரது முதலாமாண்டு நினைவஞ்சலி. இந்நாளில் அவரை பற்றிய சிறு நினைவலைகள்…
கன்னட இயக்குனரின் சித்தலிங்கைய்யாவின் மகன் இவர்
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு  தனது தந்தையாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
கன்னடத்தில் இவர் நடித்து வெற்றி பெற்ற படம்தான் தமிழில் பூவிலங்கு ஆனது. இப்படம் தமிழில் (1984-ல்) ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் தமிழிலும் அபார வெற்றி பெற்றது.
தமிழ் கன்னடம் உள்பட 99 படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த கடைசி படம் ‘பாணா காத்தாடி’
நடிகை குஷ்புவால்  ‘சினிமா உலகில் கண்ணியமான ஒரே ஒரு ஆண் நடிகர்’ என்று புகழப்பட்டவர் – நடிகர் முரளி.
‘கடல் பூக்கள்’ என்ற படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார்.
தன்னைப் பற்றி பலவிதமான செய்திகள் மீடியாவில் இடம்பெற்ற போதும்  பத்திரிகையாளர்களை அவர் ஒருபோதும் தவறாகப் பேசாத நடிகர்.
கடைசியாக அவர் தன் மகனை அறிமுகப்படுத்திய பிரஸ் மீட்டில்   ‘நான் நிறைய தவறு செய்திருக்கிறேன். அதையெல்லாம் அவ்வப்போது எழுதினீர்கள்.
என்னைத் திருத்திக் கொள்ள அவை உதவின. இப்போது என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவன் தவறு செய்யாத அளவுக்கு பார்த்துக் கொள்ளுங்கள். அவனை அரவணைத்து வழிநடத்துங்கள்’ என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார்.
கர்நாடகராக பிறந்திருந்தாலும்  தமிழ் நடிகராகவே வாழ்ந்து மறைந்தார். தமிழ மக்கள் பற்றிய அவரது கருத்து,
‘தமிழ்நாடு மக்கள் ரொம்ப நல்லவங்க. நடிகர்கள் மீது ரொம்ப மரியாதை ‌‌‌வெச்சிருக்காங்க. அவங்கக்கிட்ட நாம ஒரு நடிகரா நிற்கக்கூடாதுங்க. அவங்கக்கிட்ட நானும் மனிதன்ங்கிற மாதிரிதான் நிற்கணும்.
அப்படி நின்னா எந்த தொந்தரவும் இருக்காது. நான் நடிகனா ரோடுல நின்னாத்தான் தனித்துவம் ஆயிடும். நான் மக்களோடு மக்களா நிற்பேன். எங்க ஏரியா ரோடுல இருக்குற மரங்கள்ல்லாம் நான்தான் வெச்சிருக்கேன்.
நடிகர் முரளிக்கு பிடித்த பாடல் எது? – அதை அவரே சொல்கிறார் கேளுங்கள்.
‘எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு ‘இதயம்’ படத்தில் இடம்பெற்ற ‘பொட்டு வெச்ச ஒரு வட்ட நிலா…’ பாட்டுதான். அந்த பாட்டை எத்தனை த‌டவை கேட்டாலும் சலிக்காது. உண்மையான காதலை சொல்ல முடியாமல் தவிக்கிற தவிப்பை நல்லா சொல்லுற பாட்டு இதுதான்.”
தற்போது இருக்கும் நடிகர்களுக்கு அவர் தந்த அட்வைஸ்,
‘ஒரு படம் பண்ணிட்டா  அடுத்த படத்தில் அதிக சம்பளம் வாங்கணும்னு நினைக்கிறாங்க. அதனால முந்தைய பட தயாரிப்பாளரை விட்டுட்டு அடுத்த தயாரிப்பாளருக்கு ஜம்ப் பண்ணிடுறாங்க.
அப்படி போகக் கூடாது. பணத்துக்காக குதிச்சி குதிச்சி போயிடுறாங்க. பணத்துக்காக காத்திருக்கணும். அது நம்மை ‌தேடி வரும்வரை காத்திருக்கணும்.”
நடிகர் முரளி – பெண்மையை உயர்த்தும் கேரக்டரில் நடித்திருப்பவர்.
குடும்ப பாங்கான படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். நல்ல மனிதர். எளிமையானவர். பந்தா இல்லாமல் வாழ்ந்து மறைந்தவர்.
அந்த ‘இதயம்’ முரளி மறைந்து இன்றோடு ஆண்டொன்று. அவரை இழந்து வாடும் அனைத்து அன்பு உளங்களுக்கும் பிலிமிக்ஸ் இணையதளம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
ம் இயக்க மாட்டார் என்றும் ஒரு கருத்து பரவியது.
இந்நிலையில் திடீரென்று இயக்குனர் சீமானை அழைத்து பேசியிருக்கிறார் விஜய். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடைபெற்றதாம்.
இதனால் அவர்கள் இருவரும் இணைந்து படம் செய்வது உறுதி என்று தெரிகிறது. அப்படி இல்லை எனில் இது அரசியல் சார்ந்த சந்திப்பாக இருக்கலாம் என தெரிகிறது.


பிரபல பாப் பாடகி மடோனாவின் 12-வது புதிய இசை ஆல்பம்: 2012 இல் வெளியீடு

பிரபல கவர்ச்சி பாப் பாடகி மடோனா. இதுவரை இவர் 11 இசை ஆல்பம் தயாரித்து வெளியிட்டுள்ளார்.
தற்போது புதிதாக 12-வது இசை ஆல்பத்தை வில்லியம் ஆர்பிட் என்பவருடன் சேர்ந்து தயாரித்து வருகிறார். அதற்கான பாடல்களை நியூயார்க்கில் உள்ள ஒரு ஸ்டியோவில் நடைபெற்று வருகிறது.
அந்த இசை ஆல்பம் அடுத்த ஆண்டு (2012) வெளியிடப்பட உள்ளது. இது கடந்த 2008-ம் ஆண்டின் ‘ஹண்டு கேண்டி’ என்ற இசை ஆல்பத்தின் தொடர்ச்சி என தெரிகிறது. மடோனாவின் இசை ஆல்பத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறனர்.

பிரபல கிசு கிசு ஜோடியின் வாரிசுகள் இணையும் படம்

நியவடுக்களை படமாக்குவது மணிரத்தினத்துக்கு கை வந்த கலையாகும்.
ஏற்கனவே கன்னத்தில் முத்தமிட்டால் என்ற ஈழக்கருவை எடுத்து வெற்றி பெறாவிட்டாலும் மீண்டும் ஒரு முறை முயற்சி எடுத்திருக்கிறார்.
இலங்கை ராணுவத்தால் துன்புறுத்தப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சினையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் காதல் கதை உருவாக்குகிறார் மணிரத்னம்.
அதில் கார்த்திக்கின் மகன் கௌதம் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்றும் அதில் தனது பழைய கூட்டணி(ஏ.ஆர். ரஹ்மான்-ராஜீவ் மேனன்)யுடன் இணைகிறார் என்றும் சென்ற வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
படத்தின் நாயகியாக கமலின் மகள் அக்ஷரா நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. இப்படத்திற்கான பணிகளில் வேகமாக ஈடுபட்டு வரும் மணிரத்னம், தற்போது புதிய கதாநாயகியை நடிக்க வைத்திருக்கிறார்.
யாரென்று கேட்கிறீர்களா…? அது வேறு யாரும் அல்ல… நடிகை ராதாவின் மகள். ராதாவின் மகள் என்றதும் ‘கோ’ கார்த்திகா என்று நினைத்துவிடாதீர்கள். இளைய மகள் துளசி. ஆமாங்க! ராதாவின் இளைய மகள் துளசியும் நடிக்க வருகிறார்.
கார்த்திக், ராதா இருவரையும் பாரதிராஜா தனது ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் மூலம் 1981-ல் அறிமுகப்படுத்தினார். இப்போது 30 வருடங்களுக்குப் பிறகு, இருவரது வாரிசையும் மணிரத்னம் தனது படம் மூலம் அறிமுகப்படுத்த இருக்கிறார்.
கார்த்திக் – ராதா இருவருமே ஒரு காலத்தில் ஓஹோ என்று பேசப்பட்ட ஜோடி. இருவரைப் பற்றியும் வராத கிசுகிசுக்களே இல்லை. திருமணத்துக்குப் பிறகு ராதா நடிக்கவில்லை. தனது மூத்த மகளுக்கு அவர் கார்த்திகா எனப் பெயர் வைத்தார்.
இப்போது ‘கோ’ பட வெற்றிக்குப் பிறகு கார்த்திகா வளரும் நடிகைகளில் முக்கிய இடம் பிடித்துள்ளார். இந்திய சினிமாவில் முன்னாள் ஹீரோவின் மகனும் அவரது ஜோடி நடிகையின் மகளும் ஜோடியாக அறிமுகமாவது இதுவே முதல் முறை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!

திருப்புமுனை தரும் படம் ஒன்றுக்காய் கவர்ச்சிக்களத்தில் வித்தியா பாலன்

பாத்திரங்களுக்கான முக்கியத்துவம், மாறுபாட்ட பாத்திரம் போன்றவற்றில் நடிகர்களே அதிகம் கவனம் செலுத்தவர்.
ஆனால் நடிகை வித்தியா பாலன் நடிகர்களை போல பாத்திர முக்கியத்துவத்தை அதிகம் விரும்பகிறார்.
மறைந்த முன்னாள் கவர்ச்சி நடிகையான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு, ஹிந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாகி வருகிறது.
சில்க் ஸ்மிதா வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்திருக்கிறார். அதுவும் சில்க் ஸ்மிதாவிற்கு இணையாக கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார். இது குறித்து சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலிளிக்கையில்
“ஹிந்தியில் உருவாகி வரும் ‘டர்ட்டி பிக்சர் இந்தி படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறீர்களே, இப்படி நடிப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை? என்று என்னிடம் சிலர் கேட்கிறார்கள். ஏன்… நான் கவர்ச்சியாக நடிக்க கூடாதா? ஒரே மாதிரியான கேரக்டரில் நடிக்க விருப்பமில்லை. அதனால்தான் ‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் கவர்ச்சி வேடம் ஏற்றேன்.
இனிமேல் வித்தியாசமான வேடங்களைத்தான் ஏற்பேன். ஒருமுறை பார்த்த வித்யாவை அடுத்த படத்தில் பார்க்க முடியவில்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு கேரக்டரிலும் வித்தியாசம் இருக்கும்.’’ என்றார்.

ஆடுகள வெற்றிமாறன் அடுத்து 2 படங்களை இயக்குகின்றார்

ஆறு தேசிய விருதுகளை வென்ற ‘ஆடுகளம்’ படத்தினை இயக்கியவர் வெற்றி மாறன்.
இப்படத்திற்கு பிறகு இரண்டு படங்களை இயக்க இருக்கிறார். இதற்காக இரண்டு கதைக்களங்களை தயார் செய்து வருகிறார். அப்படம் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்திருக்கின்றன.
வடசென்னையை மையமாக வைத்து ஒரு படத்தையும், வரலாற்றுக் கதையை மையமாக வைத்து ஒரு படத்தையும் இயக்க இருக்கிறார்.
அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் வேலையில் மும்முரமாகியிருக்கிறார் வெற்றி மாறன். இவர் பெயருக்கேற்றார் போல் வரலாற்றுப் படத்தின் பெயரும் இருக்கும் என கோலிவுட் கிசுகிசுக்கிறது.

ஓட்டலுக்கு ஓனர் ஆகும் ஜீவா

சினிமாவை தவிர நடி‌கர், நடிகையர் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வதும், புதிய தொழில் தொடங்குவதும் ஒன்றும் புதிதல்ல.
அந்தவகையில் தமிழில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் ஜீவா, இப்போது புதிதாக ஓட்டல் ஒன்றை திறக்க போகிறார். கோ படத்தின் வெற்றி, ஜீவாவை ஒரு புதிய பரிணாமத்திற்கு கொண்டு சென்றது.
கோ படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த ரவுத்திரம் படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றது தந்தது.
இதுதவிர விரைவில் வெளிவர இருக்கும், வந்தான் வென்றான், ஷங்கரின் நண்பன் போன்றவையும், ஜீவாவிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் டாப்-10 நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜீவா, இப்போது புதிதாக சென்னை, தி.நகர் அருகே ஒன் எம்.பி., என்ற பெயரில் புதிதாக ஓட்டல் துவங்குகிறார்.
இந்த ஓட்டலின் திறப்பு விழா, வருகிற அக்டோபர் 8ம் தேதி துவங்குகிறது. இதனை பிரபல இயக்குநர் ஷங்கர் துவக்கி வைக்கிறார்.

அமலா பாலின் நீண்ட நாள் கனவு நனவாக உள்ளது...

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, மைனா மூலம் வெற்றி நாயகியாக வலம் வருபவர் நடிகை அமலா பால்.
சமீபத்தில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் பள்ளி தாளாளராக நடித்து அனைவரையும் பாராட்டையும் பெற்றி அமலா பாலுக்கு நீண்ட நாட்களாகவே ஒரு ஆசை இருந்து வந்தது.
அதுதான் டோலிவுட் ஆசை. எப்படியாவது தெலுங்கு படவுலகில் நுழைந்து அங்கேயும் முன்னணி வெற்றி நாயகியாக வலம் வர வேண்டும் என நினைத்த அமலா, பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசத் தொடங்கியிருக்கிறது.
ஆம்! தற்போது முரளி மகன் அதர்வாவுடன் அமலா ஜோடி சோர்ந்த முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை தெலுங்கிலும் எடுத்து வருகின்றனர்.
நிரந்தரம் நீ வூகாலே என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் அம்மணி தான் கதாநாயகி. அமலா பால் தெலுங்குத் திரையுலகிற்கு வருவதையறிந்த தெலுங்கு பட அதிபர்கள் சிலரும் அமலாவை அணுக ஆரம்பித்திருக்கிறார்களாம்.
தனக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து மிரளாத அமலா, நிரந்தரம் நீ வூகாலே படம் ரீலிஸ் ஆன பிறகுதான் புதிய படங்களில் கமிட் ஆவேன் என்று கூறி வருகிறாம்.
படம் ஹிட் ஆனால் தெலுங்கிலும் ஒரு கை பார்க்கம் திட்டத்தில் இருக்கிறாராம் அமலா பால்.

மலையை தேடி அலையும் ஆக்ஷன் கிங் அர்ஜூன்....

ஏழுமலை, மருதமலை போன்ற படங்கள் நல்ல பெயரை பெற்றுத் தந்ததால், தான் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பில் மலை இருக்க வேண்டும் என நினைத்து மலையை தேடிக் கொண்டிருக்கிறாராம் ஆக்ஷன் கிங் அர்ஜூன்.
அப்பா கேரக்டரில் நடிக்கும் அளவுக்கு வயது ஏறினாலும், டூயட் பாடும் மூடில் கோடம்பாக்கத்தை வலம் வந்து கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர் நடிகர் அர்ஜூன்.
சமீபத்தில் வெளியான படத்தில் அஜித்துக்கு சரிசமமான ரோலில் நடித்து ரசிகர்கள் மனதில் நற்பெயர் எடுத்திருக்கும் அர்ஜூன், அடுத்த பட வேட்டையில் இறங்கியிருக்கிறார்.
தன்னைத் தேடி வாய்ப்புகள் வந்த நிலை மாறி, தானே தேடிப்போய் வாய்ப்பு கேட்கும் நிலைமைக்க தள்ளப்பட்டிருக்கும் அர்ஜூன், ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டிருக்கிறார்.
இதற்கு முன்பு இவரது நடிப்பில் ஏழுமலை, மருதமலை என்ற இரண்டு படங்களை தயாரித்திருக்கிறது அந்த நிறுவனம். அர்ஜுனே தேடி வந்து வாய்ப்பு கேட்டதால் சரி என்று சம்மதித்தாராம் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
இந்த படத்தை அர்ஜுனே இயக்கப் போகிறார். சென்ட்டிமென்ட் படி ஏதாவது ஒரு மலை தலைப்பில் இருக்கட்டும் என்று கூறப்பட்டிருக்கிறதாம்.
அதனால் புதிய மலையைத் தேட ஆரம்பித்திருக்கிறாராம் ஆக்ஷன் கிங்.
 

அரசியலில் இன்ட்ரஸ்ட் இல்லாத சிம்ரன்....

அரசியலில் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை; அரசியலில் நுழையும் எண்ணமும் இல்லை என்று நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.
குஷ்புவின் கொச்சைத் தமிழில் சின்னத்திரையை கலக்கிய ஜெயா டிவியின் ஜாக்பாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் சிம்ரன்.
குஷ்பு திமுகவில் இணைந்ததால் நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டு, அவருக்கு பதிலாக நதியா நியமிக்கப்பட்டார். ஆனால் ஏனோ… நதியா பாதியிலேயே மும்பைக்கு பறந்து விட்டார்.
முந்தைய 2 பேரையும் விட தெளிவாகவும், கொஞ்சும் அழகுத் தமிழிலும் பேசி நிகழ்ச்சியை நடத்தி, பலரது பாராட்டுக்களையும் பெறத் தொடங்கி விட்டார் சிம்ரன்.
தான் நடத்தும் இந்த நிகழ்ச்சி ஜெயா டிவியின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தியிருப்பதால் ஏக குஷியில் இருக்கும் சிம்ரனிடம், இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய குஷ்பு அரசியலுக்கு போய் விட்டார்.
நீங்கள் எப்படி? என்று கேட்டால், எனக்கு அரசியலில் இன்ட்ரஸ்ட் இல்லை; அரசியலில் நுழையும் எண்ணமும் எனக்கு இல்லவே இல்லை, என்று கூறுகிறார்.